samacheer kalvi guide 2025 - 26

header ads

தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் Social Science 10th Book Back Answers - History Unit 10 - Tamil Medium

SSLC / 10th Social Science - Book Back Answers - History Unit 10 - Tamil Medium


Tamil Nadu Board 10th Standard Social Science - History Unit 10: Book Back Answers and Solutions

    This post covers the book back answers and solutions for Unit 10 – History from the Tamil Nadu State Board 10th Standard Social Science textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at Kalvimini.com

    We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorise these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.

    By going through this material, you’ll gain a strong understanding of History Unit 10, along with the corresponding book back questions and answers (PDF format).

Question Types Covered:

1 Mark Questions: Choose the correct answer, fill in the blanks, identify the correct statement, match the following 

2 Mark Questions: Answer briefly 

3, 4, and 5 Mark Questions: Answer in detail

All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.


All the best, Class 10 students! Prepare well and aim for top scores. Thank you!



அலகு 10

தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்

I. சரியான விடையைத் தேர்வு செய்க.

1. 1709இல் தரங்கம்பாடியில் ………………. ஒரு முழுமையான அச்சகத்தை நிறுவினார்.

அ) கால்டுவெல்

ஆ) F.W. எல்லிஸ்

இ) சீகன்பால்கு

ஈ) மீனாட்சி சுந்தரனார்


2. 1893இல் ஆதி திராவிட மகாஜன சபையை ……………… நிறுவினார்.

அ) இரட்டைமலை சீனிவாசன்

ஆ) B.R. அம்பேத்கார்

இ) ராஜாஜி

ஈ) எம்.சி. ராஜா


3. இந்தியாவின் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட தொழிற்சங்கம் ………….. .இல் உருவாக்கப்பட்டது.

அ) 1918

ஆ) 1917

இ) 1916

ஈ) 1914


4. அரசு அதிகாரிகளைத் தேர்வு செய்ய ………………. நீதிக் கட்சியால் நிறுவப்பெற்றது.

அ) பணியாளர் தேர்வு வாரியம்

ஆ) பொதுப் பணி ஆணையம்

இ) மாநிலப் பணியாளர் ஆளெடுப்பு வாரியம்

ஈ) பணியாளர் தேர்வாணையம்


5. சென்னை மாகாணத்தில், ஒடுக்கப்பட்ட வகுப்பிலிருந்து முதன் முறையாகச் சட்டமேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

அ) எம்.சி. ராஜா

ஆ) இரட்டை மலை சீனிவாசன்

இ) டி.எம். நாயர்

ஈ) பி. வரதராஜூலு


II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. முதன் முதலாக அச்சேறிய ஐரோப்பிய மொழி அல்லாத மொழி __நீதிக்கட்சி__ ஆகும்.

2. புனித ஜார்ஜ் கோட்டைக் கல்லூரியை உருவாக்கியவர் __மறைமலையடிகள்__ ஆவார்.

3. __F.W. எல்லிஸ்__ தமிழ் மொழியியல் தூய்மை வாதத்தின் தந்தையெனக் கருதப்படுகிறார்.

4. தேர்தல் அரசியலில் பெண்கள் பங்கேற்பதை முதலில் அங்கீகரித்தது __தமிழ்__ ஆகும்.

5. சூரியநாராயண சாஸ்திரி எனும் பெயர் __டாக்டர். முத்துலெட்சுமி ரெட்டி__ என மாற்றம் பெற்றது.

6. __ஆபிரகாம் பண்டிதர்__ தமிழ் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.

7. இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் __பரிதிமாற்கலைஞர்__

III. சரியான கூற்றைத் தேர்வு செய்க.

1. (i) மிக முன்னதாகவே வெளியிடப்பட்ட தமிழ் இலக்கிய நூல்களில் ஒன்றான திருக்குறள் 1812இல் வெளியிடப்பட்டது.
(ii) பனையோலைகளில் எழுதப்பெற்ற பல்வேறு தமிழ் இலக்கண இலக்கிய கையெழுத்துப் பிரதிகளை மறைமலையடிகள் சேகரித்துத் தொகுத்தார்.
(iii) இராபர்ட் கால்டுவெல் திராவிட மொழிகளுக்கும் சமஸ்கிருதத்திற்கும் இடையில் இல்லாத ஒப்புமை திராவிட மொழிக்களுக்கிடையே நெருக்கமாக நிலவுவதை நிரூபித்தார். தமிழின் தொன்மையையும் நிரூபித்தார்.
(iv) திரு.வி. கல்யாணசுந்தரம் தொழில் சங்க இயக்கத்தின் தொடக்ககால முன்னோடியாக இருந்தார்.

அ) (i), (ii) ஆகியன சரி

ஆ) (i), (iii) ஆகியன சரி

இ) (iv) சரி

ஈ) (ii), (iii) ஆகியன சரி


2. கூற்று : சென்னை மாகாணத்தில் 1920 முதல் 1937 வரை நீதிக்கட்சி தொடர்ந்து ஆட்சியில் இருந்தது.
காரணம் : இக்காலகட்டத்தில் இரட்டையாட்சிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சட்டமன்றத்தைப் புறக்கணித்தது.

அ) காரணம், கூற்று ஆகியவை சரி.

ஆ) கூற்று சரி ஆனால் காரணம் கூற்றின் சரியான விளக்கமல்ல.

இ) காரணம், கூற்று இரண்டுமே தவறு.

ஈ) கூற்று சரி. ஆனால் கூற்றுடன் அது பொருந்தவில்லை .

IV. பொருத்துக

1. திராவிடர் இல்லம் அ - மறைமலையடிகள்
2. தொழிலாளர் ஆ - இரட்டைமலை சீனிவாசன்
3. தனித் தமிழ் இயக்கம் இ - சிங்காரவேலர்
4. ஜீவிய சரித சுருக்கம் ஈ - நடேசனார்

விடைகுறிப்பு :

1. திராவிடர் இல்லம் – ஈ - நடேசனார்

2. தொழிலாளர் – இ - சிங்காரவேலர்

3. தனித் தமிழ் இயக்கம் – அ - மறைமலையடிகள்

4. ஜீவிய சரித சுருக்கம் – ஆ - இரட்டைமலை சீனிவாசன்

V. சுருக்கமான விடையளிக்கவும்.

1. தமிழ் மறுமலர்ச்சி குறித்து சிறுகுறிப்பு வரைக.

விடைகுறிப்பு:

1. இந்திய மக்கள் மீது ஆங்கிலேயர்கள் தங்கள் பண்பாட்டை திணிக்க முயன்றனர்.

2. தமிழ்நாடும் அத்தகைய மாற்றத்தை அனுபவித்தது. தமிழ்மொழி மற்றும் கலாச்சாரம் பாதிக்கப்பட்டது

3. அச்சு இயந்திரம் அறிமுகம், திராவிட மொழிகள் மீதான ஆய்வுகள் மற்றும் பல தமிழ் மறுமலர்ச்சி தோன்ற காரணமானது.

4. இதன் விளைவு சமய, சமூக சீர்திருத்த இயக்கங்கள் தோன்றின. இதுவே தமிழ் மறுமலர்ச்சி எனப்படும்.


2. தென்னிந்திய மொழிகளுக்காக கால்டுவெல்லின் பங்களிப்பினை நன்கு புலப்படுத்துக

விடைகுறிப்பு:

1. கால்டுவெல் தன் இலக்கண நூல் தென்னிந்திய மொழிகள் தனிப்பட்ட மொழி குடும்பத்தைச் சார்ந்தவை. அவை இந்தோ-ஆரிய குடும்ப மொழிகளோடு தொடர்பில்லாதவை என்ற கோட்பாட்டை கூறினார்.

2. திராவிட மொழிகளுக்கிடையே நெருக்கமான ஒப்புமை இருப்பதையும், அவை சமஸ்கிருதத்துடன் இல்லை என்றும் கூறினார்.


3. தங்களுடைய எழுத்துக்களின் மூலம் தமிழ் இலக்கியத்தின் புத்துயிர்ப்புக்குப் பங்களிப்புச் செய்த ஆளுமைகளைப் பட்டியலிடவும்.

விடைகுறிப்பு:

1. உ.வே.சா

2. திரு.வி.க.

3. மறைமலையடிகள்

4. பாரதியார்

5. தாமோதரனார்

6. வையாபுரி

7. பரிதிமாற்கலைஞர்


4. நீதிக்கட்சியால் நிறைவேற்றப்பட்ட இந்து சமய அறநிலைய சட்டத்தின் முக்கியத்துவத்தை விவாதிக்கவும்

விடைகுறிப்பு:

1. 1926-ல் நிறைவேறிய இச்சட்டம் எந்த ஒரு தனிநபரும், சாதிவேறுபாடின்றி கோயில் நிர்வாக குழுவில் உறுப்பினராகவும், கோயில் சொத்துக்களை நிர்வகிக்கவும் வழிவகை செய்தது.

2. இதனால் உயர்சாதியினரால் சுரண்டப்பட்ட கோயில் சொத்துக்கள் (பொது சொத்துக்கள்)


5. தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தால் வெளியிடப்பட்ட செய்தித்தாள்களின் பெயர்களைக் குறிப்பிடுக.

விடைகுறிப்பு:

1. தமிழ் - திராவிடன்.

2. ஆங்கிலம் - ஜஸ்டிஸ்

3. தெலுங்கு - ஆந்திர பிரகாசிகா


6. பெரியாரை ஒரு பெண்ணியக்க வாதியாக மதிப்பிடுக

விடைகுறிப்பு:

1. குழந்தை திருமணம், தேவதாசி முறையை எதிர்த்தார்.

2. பெண்களுக்கு விவாகரத்து பெறுதல், சொத்துரிமை கொடுப்பதில் பங்கு உண்டு என வலியுறுத்தினார்

3. பெண்களின் மோசமான நிலைக்கு குரல் கொடுத்தார்

4. குடும்ப கட்டுப்பாடு, கருத்தடை ஆதரித்தார்

5. பெண்ணுக்கு தாய்மை பெருஞ்சுமை என கூறினார்.

VI. பின்வரும் வினாக்களுக்கு விரிவான விடையளிக்கவும்.

1. தமிழ் மறுமலர்ச்சியின் தோற்றம், வளர்ச்சி குறித்து ஒரு கட்டுரை எழுதவும்

விடைகுறிப்பு:

1. காலனியாதிக்கத்தின் போது தமிழ் மறுமலர்ச்சியில் பண்பாடு, மனிதநேயம், கலாச்சாரம் போன்ற மாற்றத்தை தமிழ்நாடு அனுபவித்தது

2. அச்சு இயந்திரம் வருகை, தமிழ்மொழி மீதான ஆய்வுகள் தமிழ் மறுமலர்ச்சிக்கு உதவின

3. ஐரோப்பிய மொழிகள் தவிர அச்சில் ஏறிய முதல்மொழி தமிழ்மொழியே ஆகும்

4. பண்டைய தமிழ் இலக்கியங்கள் வெளியிட கீழ்கண்ட தமிழ் அறிஞர்கள் அரும்பாடு பட்டனர் சி.வை.தாமோதரனார், உ.வே.சாமிநாதனார் (தமிழ் இலக்கண, இலக்கிய நூல்கள்)

5. பழம்பெரும் நூல்கள் வெளியிடப்பட்டது தமிழ் மக்களின் வரலாறு, மரபு, மொழி, இலக்கியம், சமயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது

6. தமிழர்களின் அடையாளம் அச்சு வடிவிலான பண்டை தமிழ் நூல்களால் வெளிவந்தன

7. கால்டுவெல்லின் தமிழின் தொன்மையும், பி.சுந்தரனார், திரு.வி.க.பாரதிதாசன், பரிதிமாற்கலைஞர், மறைமலையடிகள் போன்றோரின் பங்கும் தமிழ் மறுமலர்ச்சிக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் உதவின.


2. நீதிக்கட்சியின் தோற்றத்திற்கான பின்புலத்தை விளக்கி, சமூக நீதிக்கான அதன் பங்களிப்பை சுட்டிக் காட்டவும்

விடைகுறிப்பு:

நீதிக்கட்சியின் தோற்றம்:

1. தமிழக அரசியல் பிராமணர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து பிராமணரல்லா Dr. நடேசனார், பி.டி.தியாகராசர், T.M.நாயர் மற்றும் அலமேலு மங்கை ஆகியோர் பிராமணர் அல்லாத தென்னிந்திய நல உரிமை சங்கத்தை 1916 நவம்பர் 20ல் உருவாக்கினர்

2. இதுவே நீதிக்கட்சியாக பெயர் மாற்றப்பட்டது

நீதிக்கட்சியின் பங்களிப்பு:

1. கட்சியின் கொள்கைகளை பரப்ப திராவிடன், ஜஸ்டிஸ், ஆந்திர பிரகாசிகா பத்திரிக்கைகள் வெளியிட்டது.

2. பிராமணரல்லாதவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் களத்தில் இடம்

3. சாதி மறுப்பு திருமண ஆதரவு, தேவதாசிமுறை ஒழிப்பு

4. 1921-ல் அரசியலில் பெண்களுக்கு வாக்குரிமை, இடஒதுக்கீடு

5. 1924-ல் பணியாளர் தேர்வு வாரியம் தோற்றம்

6. 1926ல் அறநிலையத்துறை சட்டம் இயற்றல்

7. ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா

8. மதிய உணவு திட்டம் சென்னையில் முதன்முதல் அறிமுகம்


3. தமிழ்நாட்டினுடைய சமூக மாற்றங்களுக்கு ஈ.வெ.ரா பெரியாரின் தீர்மானகரமான பங்களிப்பை மதிப்பீடு செய்யவும்

விடைகுறிப்பு:

பெரியாரின் பங்களிப்பு:

1. சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்தார்

2. பகுத்தறிவுக் கருத்துக்களை பரப்ப குடியரசு, ரிவோல்ட் பகுத்தறிவு, விடுதலை போன்ற பத்திரிக்கைகளை நடத்தினார்.

3. இந்தி மொழி கட்டாயத்தை எதிர்த்து இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தினார்

4. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக வைக்கம் போராட்டம்

5. குழந்தை திருமணம், தேவதாசி முறையை எதிர்த்தார்

6. பெண்களுக்கு சொத்துரிமை ஆண்- பெண் சமஉரிமை

7. சுய மரியாதை திருமணங்களை நடத்தினார்

8. அனைத்து மதத்தினரும் அர்ச்சகர் ஆக வாதிட்டார்

9. சேரன் மாதேவி குருகுலப் பள்ளி சாதிவேறுபாடு எதிர்ப்பு

10. மூட நம்பிக்கைகளை வன்மையாக கண்டித்தார்.