samacheer kalvi guide 2025 - 26

header ads

10th Social Science History Unit 7 Book Back Answers Tamil Medium

SSLC / 10th Social Science - Book Back Answers - History Unit 7 - Tamil Medium


Tamil Nadu Board 10th Standard Social Science - History Unit 7: Book Back Answers and Solutions

    This post covers the book back answers and solutions for Unit 7 – History from the Tamil Nadu State Board 10th Standard Social Science textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at Kalvimini.com.

    We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorise these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.

    By going through this material, you’ll gain a strong understanding of History Unit 7, along with the corresponding book back questions and answers (PDF format).

Question Types Covered:

1 Mark Questions: Choose the correct answer, fill in the blanks, identify the correct statement, match the following 

2 Mark Questions: Answer briefly 

3, 4, and 5 Mark Questions: Answer in detail

All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.


All the best, Class 10 students! Prepare well and aim for top scores. Thank you!



அலகு 7

காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்

I. சரியான விடையைத் தேர்வு செய்க.

1. 1818ஆம் ஆண்டு கிழக்கு வங்காளத்தில் ஹாஜி ஷரியத்துல்லா கீழ்க்கண்டவற்றில் எதனைத் தொடங்கினார்?

அ) வஹாபி கிளர்ச்சி

ஆ) ஃபராசி இயக்கம்

இ) பழங்குடியினர் எழுச்சி

ஈ) கோல் கிளர்ச்சி


2. ‘நிலம் கடவுளுக்குச் சொந்தம்’ என்று அறிவித்ததுடன் நிலத்தின் மீது வரிவிதிப்பதோ வாடகை வசூலிப்பதோ இறைச் சட்டத்திற்கு எதிரானது என்று கூறியவர் யார்?

அ) டிடு மீர்

ஆ) சித்து

இ டுடு மியான்

ஈ) ஷரியத்துல்லா


3. நிரந்தரக் குடியிருப்பின் கீழ் ஜமீன்களை உருவாக்கும் திட்டத்தின்படி தங்கள் சொந்த நிலத்தை விட்டு விரட்டப்பட்டவர்கள் யார் ?

அ) சாந்தலர்கள்

ஆ) டிடு மீர்

இ) முண்டா

ஈ) கோல்


4. கீழ்க்காண்போரில் தீவிர தேசியவாதி யார்?

அ) தாதாபாய் நௌரோஜி

ஆ) நீதிபதி கோவிந்த் ரானடே

இ) பிபின் சந்திர பால்

ஈ) ரொமேஷ் சந்திரா


5. வங்கப்பிரிவினை எந்த நாளில் நடைமுறைக்கு வந்தது ?

அ) 1905 ஜூன் 19

ஆ) 1906 ஜூலை 18

இ) 1907 ஆகஸ்ட் 19

ஈ) 1905 அக்டோபர் 16


6. சோட்டா நாக்பூர் குத்தகைச் சட்டம் எந்தப் பின்னணியில் நிறைவேற்றப்பட்டது?

அ) கோல் கிளர்ச்சி

ஆ) இண்டிகோ கிளர்ச்சி

இ) முண்டா கிளர்ச்சி

ஈ) தக்காண கலவரங்கள்


7. 1916ஆம் ஆண்டு ஏப்ரலில் தன்னாட்சி இயக்கத்தை முதலில் தொடங்கியவர் யார்?

அ) அன்னி பெசன்ட் அம்மையார்

ஆ) பிபின் சந்திர பால்

இ) லாலா லஜபதி ராய்

ஈ) திலகர்


8. நீல் தர்பன் நாடகம் மூலமாக இண்டிகோ பயிரிடும் விவசாயிகளின் இன்னல்கள் குறித்து ஆங்கிலேயரின் கவனத்துக்கு கொண்டு சென்றவர் யார்?

அ) தீன பந்து மித்ரா

ஆ) ரொமேஷ் சந்திர தத்

இ) தாதாபாய் நௌரோஜி

ஈ) பிர்சா முண்டா

II. கோடிட்ட இடங்களை நிரப்புக. 

1. மன்னராட்சிக்கும் நிலசுவான்தாரர்களுக்கும் எதிரான __1885__ இயக்கம் 1827ஆம் ஆண்டு வாக்கில் தொடங்கப்பட்டது.

2. சோட்டாநாக்பூர் பகுதியில் நடந்த மிகப்பெரிய பழங்குடியினர் கிளர்ச்சி __1908__

3. __சோட்டா நாக்பூர் குத்தகை__ சட்டம் பழங்குடியினரல்லாத மக்களை பழங்குடி நிலத்தில் நுழைய தடைவிதித்தது.

4. சோட்டா நாக்பூர் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு __கோல் கிளர்ச்சி__

5. W.C. பானர்ஜி இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு __வஹாபி__

III. சரியான கூற்றைத் தேர்வு செய்க. 

1. (i) மீர் ஜாபரிடம் இருந்து 2 கோடியே 25 லட்ச ரூபாயை வாங்கிய கிழக்கு இந்திய கம்பெனி அதனை பிரிட்டனில் தொழிற்புரட்சி மேம்பட முதலீடு செய்தது.

(ii) 1831 – 1832ஆம் ஆண்டு அரசு அதிகாரிகள் மற்றும் கடன்கொடுப்போருக்கு எதிரான கிளர்ச்சியைக் கோல் மக்கள் ஒருங்கிணைத்தனர்.

(iii) 1855ஆம் ஆண்டில் சாந்தலர் கிளர்ச்சிக்கு சித்து, கணு ஆகிய இரண்டு சாந்தலர் சகோதரர்கள் தலைமை ஏற்றனர்.

(iv) 1879ஆம் ஆண்டில் சாந்தலர்கள் வசம் இருந்த பகுதிகளை ஒழுங்குமுறைப்படுத்த ஒரு சட்டம் இயற்றப்பட்டது.

அ) (i), (ii) மற்றும் (iii) சரியானவை

ஆ) (ii) மற்றும் (iii) சரியானவை

இ) (iii) மற்றும் (iv) சரியானவை

ஈ) (i) மற்றும் (iv) சரியானவை

விடைகுறிப்பு : அ) (i), (ii) மற்றும் (iii) சரியானவை


2. (i) காலனி ஆட்சி பற்றியப் பொருளாதார விமர்சனத்தைச் செய்தது ஆரம்பகால இந்திய தேசியவாதிகளின் மிக முக்கியமான பங்களிப்புகளில் ஒன்றாகும்.

(ii) இந்தியாவில் வறுமை அதிகரிக்க சமய ரீதியிலான சுரண்டலே மிக முதன்மையான காரணம் என்று ஆரம்பகால காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர்.

(iii) சுயராஜ்ஜியம் அல்லது தன்னாட்சியை எட்டுவதே மிததேசியவாத காங்கிரஸ் தலைவர்களின் குறிக்கோள்களில் ஒன்றாக இருந்தது.

(iv) வங்காளத்தின் ஆதிக்கத்தை குறைப்பதையும் தேசியவாத இயக்கத்தை வலுவிழக்கச் செய்வதையும் குறிக்கோளாகக் கொண்டு வங்கப் பிரிவினை நடந்தது.

அ) (i) மற்றும் (iii) சரியானவை

ஆ) (i), (iii) மற்றும் (iv) சரியானவை

இ) (ii) மற்றும் (iii) சரியானவை

ஈ) (iii) மற்றும் (iv) சரியானவை

விடைகுறிப்பு : ஆ) (i), (iii) மற்றும் (iv) சரியானவை


3. கூற்று : இந்திய வரலாற்றில் முதன்முறையாக காலனி ஆட்சியின் கீழ் அரசு வனங்களின் மீது நேரடி தனியுரிமையைக் கோரியது.

காரணம் : இண்டிகோ விவசாயம் செய்யுமாறு விவசாயிகளை நிர்ப்பந்திக்க தொழில் செய்வோர் மிரட்டல் மற்றும் வன்முறையைக் கையாண்டனர்.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி; ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை

ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே தவறு

இ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி அத்துடன் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.

ஈ) கூற்று தவறு காரணம் சரி

விடைகுறிப்பு : அ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி; ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.


4. கூற்று : பிரிட்டிஷ் அரசு 1857ஆம் ஆண்டின் கிளர்ச்சியை இரும்புக்கரம் கொண்டு அடக்கியது.

காரணம் : மையப்படுத்தப்பட்ட நிர்வாகம் இல்லாததால் கிளர்ச்சி தோல்வி கண்டது.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே தவறு.

ஆ) கூற்று தவறு காரணம் சரி.

இ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி. அத்துடன் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.

ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.

விடைகுறிப்பு : இ) கூற்றும் மற்றும் காரணம் இரண்டுமே சரி. அத்துடன் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.

IV. பொருத்துக

1. வஹாபி கிளர்ச்சி அ - லக்னோ
2. முண்டா கிளர்ச்சி ஆ - பேஷ்வா இரண்டாம் பாஜி ராவ்
3. பேகம் ஹஸ்ரத் மகால் இ - டிடு மீர்
4. கன்வர் சிங் ஈ - ராஞ்சி
5. நானாசாகிப் உ - பீகார்

விடைகுறிப்பு :

1. வஹாபி கிளர்ச்சி – இ - டிடு மீர்

2. முண்டா கிளர்ச்சி – ஈ - ராஞ்சி

3. பேகம் ஹஸ்ரத் மகால் – அ - லக்னோ

4. கன்வர் சிங் – உ - பீகார்

5. நானாசாகிப் – ஆ - பேஷ்வா இரண்டாம் பாஜி ராவ்

V. சுருக்கமான விடையளிக்கவும்.

1. ஆங்கிலேய இந்தியாவில் விவசாயிகளின் கிளர்ச்சி எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன?

மறுசீரமைத்தல் கிளர்ச்சிகள்
சமய இயக்கங்கள்
சமூககொள்கை
மக்களின் கிளர்ச்சி

2. வாரிசு இழப்புக் கொள்கையின் அடிப்படையில் பிரிட்டிஷ் அரசில் இணைத்துக்கொள்ளப்பட்ட பகுதிகளைப் பட்டியலிடவும்.

சதாரா
ஜான்சி
நாக்பூர்
சாம்பல்பூர் 4.சாம்பல்பூர்
பஞ்சாபின் சில பகுதிகள்.

3. வளங்கள் சுரண்டப்படுவது (செல்வச் சுரண்டல்) பற்றி தங்களின் கருத்து என்ன?

ஆங்கில ஆட்சிக் காலத்தில் இந்தியா பிரிட்டனின் தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருட்களை அனுப்பியும் உற்பத்திப் பொருட்களை விற்கும் சந்தையாகவும் உருவானது.
எந்தவித ஆதாயமுமின்றி வளங்கள் தொடர்ந்து பரிமாற்றம் செய்வது வளங்களின் சுரண்டலாகும்.

4. தன்னாட்சி (ஹோம்ரூல்) இயக்கத்தின் முக்கிய குறிக்கோள்களை விவரிக்கவும்

அரசியலமைப்பு மூலம் பிரிட்டீஷ் பேரரசிற்குள் தன்னாட்சி அடைவது.
தன்னாட்சி பகுதி (டொமினியன்) தகுதியை அடைவது
தங்கள் இலக்குகளை வன்முறையில்லா அரசியல் சாசனம் மூலம் அடைவது.

5. லக்னோ ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களைத் தொகுத்து வழங்கவும்

1916ல் ஏற்பட்டது
காங்கிரஸ் கட்சியும், முஸ்லீம் லீக்கும் இந்தியாவில் விரைவில் தன்னாட்சி வேண்டுமென ஏற்றுக்கொண்டன.
இதற்கு பதிலாக முஸ்லீம்களுக்கு, தனித்தொகுதிகள் வழங்கும் திட்டத்தை காங்கிரஸ் தலைமை ஏற்றது.

VI. பின்வரும் வினாக்களுக்கு விரிவான விடையளிக்கவும். 

1. 1857ம் ஆண்டின் கிளர்ச்சிக்கான காரணங்கள் மற்றும் பின் விளைவுகள் குறித்து விரிவாக ஆராயவும்.

ஆங்கிலேயரின் இணைப்புக் கொள்கை:
ஆங்கிலேயர்கள் தங்கள் முழு அதிகாரங்களைக் கொண்டு சுதேச அரசர்கள் ஊழல்வாதிகள் மற்றும் திறனற்றவர்கள் என அவர்களின் ஆட்சிப் பகுதிகளை இணைத்துக் கொண்டனர்.
வாரிசு இழப்புக் கொள்கை மூலம் சதாரா, ஜான்சி, நாக்பூர், சாம்பல்பூர் ஆகியன இணைக்கப்பட்டன.

இந்திய கலாச்சார உணர்வுகள் பற்றிய தீவிரதன்மை இல்லாதது:
மதக் குறியீடு, தாடி வைக்க தடை
புதிய தலைப்பாகை அறிமுகம், ஆடை கட்டுப்பாடு
ஊதியம் மற்றும் பதவி உயர்வில் பாரபட்சம்
பசு மற்றும் பன்றி கொழுப்பு தடவிய தோட்டாக்களின் பயன்பாடு

விளைவுகள்:
1858 விக்டோரியா மகாராணியின் யின் பேரறிக்கை
கம்பெனி ஆட்சி முடிவு, இங்கிலாந்து அரசின் நேரடி ஆட்சி
மதம் சார்ந்த விஷயங்களில் தலையீடு இல்லை.
அரசுப் பணியில் இந்தியர்கள், ராணுவ கட்டமைப்பில்
இந்திய அரசு செயலர் நியமனம்.


2. 1905ம் ஆண்டு நிகழ்ந்த வங்காள பிரிவினையின்போது வங்காள மக்கள் எவ்விதம் நடந்து கொண்டனர்?

வங்காள மக்கள் நடந்து கொண்ட விதம்:
மத அடிப்படையில் பிரித்த வங்கப் பிரிவினை மக்களை ஒன்றுபடச் செய்தது.
மிதவாதிகள், தீவர வாதிகள் என இரண்டாக போராட்டக் குழு பிரிந்து கிளர்ச்சியில் ஈடுபட்டது.
மனுக்கள், பொது கூட்டங்கள், செய்தி பிரச்சாரங்கள் மூலம் மக்கள் எதிர்ப்பு நடந்தது.
அந்நிய பொருட்களை மக்கள் புறக்கணித்தனர்
சுதேசி இயக்கக் கொள்கை வங்க மக்களிடம் வேகமாக பரவியது
புறக்கணிப்பும், சுதேசி இயக்கமும் இணைந்தே நடந்தது
1905 அக்டோபர் 16 பிரிவினை நாள் துக்க நாளாக மாறியது
மக்கள் பள்ளி, கல்லூரிகள் புறக்கணிப்பு, நீதிமன்ற அரசு சேவை புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.