samacheer kalvi guide 2025 - 26

header ads

இந்தியா – கால நிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள் 10th Geography Unit 2 Book Back Solutions

 SSLC / 10th Social Science - Book Back Answers - Geography Unit 2 - Tamil Medium


Tamil Nadu Board 10th Standard Social Science - Geography Unit 2: Book Back Answers and Solutions

    This post covers the book back answers and solutions for Unit 2 – Geography from the Tamil Nadu State Board 10th Standard Social Science textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at kalvimini.com.

   We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.

    By going through this material, you’ll gain a strong understanding of Geography Unit 2 along with the corresponding book back questions and answers (PDF format).

Question Types Covered:

1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following 

2 Mark Questions: Answer briefly 

3, 4, and 5 Mark Questions: Answer in detail

All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.

All the best, Class 10 students! Prepare well and aim for top scores. Thank you!



அலகு 2:

இந்தியா – கால நிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள்

I. சரியான விடையைத் தேர்வு செய்க.

1. மேற்கத்திய இடையூறுகளால் மழைப்பொழிவைப் பெறும் பகுதி ………………..

அ) தமிழ்நாடு

ஆ) கேரளா

இ) பஞ்சாப்

ஈ) மத்தியப் பிரதேசம்



2. கேரளா மற்றும் கர்நாடக கடற்கரைப் பகுதிகளில் விளையும் மாங்காய்கள் விரைவில் முதிர்வதற்கு …………….. காற்றுகள் உதவுகின்றன.

அ) லூ

ஆ) நார்வெஸ்டர்ஸ்

இ) மாஞ்சாரல்

ஈ) ஜெட் காற்றோட்டம்



3. ஒரே அளவு மழைபெறும் இடங்களை இணைக்கும் கோடு ………………. ஆகும்.

அ) சமவெப்ப கோடுகள்

ஆ) சம மழைக்கோடுகள்

இ) சம அழுத்தக்கோடுகள்

ஈ) அட்சக் கோடுகள்



4. இந்தியாவின் காலநிலை ……………… ஆக பெயரிடப்பட்டுள்ளது.

அ) அயன மண்டல ஈரக் காலநிலை

ஆ) நிலநடுக் கோட்டுக் காலநிலை

இ) அயனமண்டல பருவக்காற்றுக் காலநிலை

ஈ) மித அயனமண்டலக் காலநிலை



5. பருவக்காற்று காடுகள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன.

அ) அயன மண்டல பசுமை மாறாக் காடுகள்

ஆ) இலையுதிர்க் காடுகள்

இ) மாங்குரோவ் காடுகள்

ஈ) மலைக் காடுகள்



6. சேஷாசலம் உயிர்க்கோள பெட்டகம் அமைந்துள்ள மாநிலம் ………………..

அ) தமிழ்நாடு

ஆ) ஆந்திரப் பிரதேசம்

இ) மத்தியப் பிரதேசம்

ஈ) கர்நாடகா



7. யுனெஸ்கோவின் (UNESCO) உயிர்க்கோளப் பாதுகாப்பு பெட்டகத்தின் ஒரு அங்கமாக இல்லாதது …………………

அ) நீலகிரி

ஆ) அகத்திய மலை

இ) பெரிய நிக்கோபார்

ஈ) கட்ச்


III. கீழ்க்கா ணும் வாக்கியங்களைக் கருத்தில் கொண்டு கொடுக்கப்பட்டுள்ளவற்றில் சரியான விடையைத் தேர்வு செய்யவும்

1. கூற்று : இமய மலையானது ஒரு காலநிலை அரணாகச் செயல்படுகிறது.
காரணம் : இமயமலை மத்திய ஆசியாவிலிருந்து வீசும் குளிர்க்காற்றை தடுத்து இந்தியத் துணைக்கண்டத்தை மிதவெப்பமாக வைத்திருக்கிறது.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி கூற்றுக்கான காரணம் சரி
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி கூற்றுக்கான காரணம் தவறு
இ) கூற்று சரி காரணம் தவறு
ஈ) கூற்று தவறு காரணம் சரி


IV. பொருந்தாத விடையைத் தேர்வு செய்க

1. ஓதக்காடுகள் இதனைச் சுற்றி காணப்படுகிறது.
அ) பாலைவனம்
ஆ) கங்கை பிரம்மபுத்ரா டெல்டா
இ) கோதாவரி டெல்டா
ஈ) மகாநதி டெல்டா


2. இந்தியாவின் காலநிலையைப் பாதிக்கும் காரணிகள்
அ) அட்ச பரவல்
ஆ) உயரம்
இ) கடலிலிருந்து அமைந்துள்ள தூரம்
ஈ) மண்


II. பொருத்துக

எண் பெயர் விருப்பங்கள்
1. சுந்தரவனம் பாலை மற்றும் அரைப்பாலைவனத் தாவரங்கள்
2. உயிர்பன்மைச் சிறப்பு பகுதிகள் அக்டோபர், டிசம்பர்
3. வடகிழக்குப் பருவக் காற்று கடற்கரைக் காடுகள்
4. அயன மண்டல முட்புதர் காடுகள் மேற்கு வங்காளம்
5. கடலோரக் காடுகள் இமயமலைகள்

விடைகுறிப்பு :

1. சுந்தரவனம் – மேற்கு வங்காளம்

2. உயிர்பன்மைச் சிறப்பு பகுதிகள் – இமயமலைகள்

3. வடகிழக்குப் பருவக் காற்று – அக்டோபர், டிசம்பர்

4. அயன மண்டல முட்புதர் காடுகள் – பாலை மற்றும் அரைப்பாலைவனத் தாவரங்கள்

5. கடலோரக் காடுகள் – கடற்கரைக் காடுகள்


V. சுருக்கமான விடையளிக்கவும்.

1. காலநிலையை பாதிக்கும் காரணிகளை பட்டியலிடுக.

 காலநிலையை பாதிக்கும் காரணிகள்:
அட்சங்கள்
✰ கடல் மட்டத்திலிருந்து உயரம்
✰ கடலிலிருந்து அமைந்துள்ள தொலைவு
✰ பருவக்காற்று
✰ நிலத்தோற்றம்
✰ ஜெட் காற்றுகள்
போன்றவை இந்திய காலநிலையை பாதிக்ம் காரணிகளாகும்.

2. ”வெப்ப குறைவு விகிதம்” எனறால் என்ன?

வெப்ப குறைவு விகிதம்: 
புவிப்பரப்பிலிருந்து உயரே செல்லச் செல்ல வளிமண்டலத்தில் ஒவ்வொரு 1000 மீட்டர் உயரத்திற்கும் 6.50C என்ற அளவில் வெப்பநிலை குறைகிறது. இதற்கு ”வெப்ப குறைவு விகிதம்” என்று பெயர்.

3. "ஜெட் காற்றோட்டங்கள்" என்றால் என்ன?

ஜெட் காற்றோட்டங்கள் :
ஜெட் காற்றோட்டங்கள் என்பது வளிமண்டலத்தின் உயர் அடுக்குகளில் குறுகிய பகுதிகளில் வேகமாக நகரும் காற்றுகளைக் குறிக்கிறது. அதை மேலை மற்றும் கீழை ஜெட் காற்றுகள் என பிரிக்கின்றனர்.

4. பருவக்காற்று குறித்து ஒரு சிறு குறிப்பு எழுதுக.
 
பருவக்காற்று :
"மான்சூன்" என்ற சொல் "மௌசிம்" என்ற அரபு சொல்லில் இருந்து பெறப்பட்டது.
அரபிக் கடலில் பருவங்களுக்கு ஏற்ப மாறி வீசும் காற்றுகளை குறிப்பிட பருவக்காற்று என்ற சொல்லை அரபு மாலுமிகள் பயன்படுத்தினர்.

5. இந்தியாவின் நான்கு பருவக் காலங்களைக் குறிப்பிடுக.
விடைகுறிப்பு:
 
இந்தியாவின் நான்கு பருவக் காலங்கள் :
குளிர் காலம் : ஜனவரி முதல் பிப்ரவரி வரை
கோடைக் காலம் : மார்ச் முதல் மேவரை
தென்மேற்கு பருவக்காற்று காலம் : ஜூன் முதல் செப்டம்பர் வரை
வடகிழக்கு பருவக்காற்று காலம் : அக்டோபர் முதல் டிசம்பர் வரை

6. பருவமழை வெடிப்பு என்றால் என்ன?
விடைகுறிப்பு:
 
பருவமழை வெடிப்பு :
பருவமழை வெடிப்பு என்பது தென்மேற்கு பருவக்காற்று, கேரளாவில் உள்ள மலப்பார் கடற்கரையை அடையும் போது பலத்த இடி மின்னலுடன் கூடிய மழையை அளிப்பதாகும்.

7. அதிக மழைப்பெறும் பகுதிகளைக் குறிப்பிடுக.
விடைகுறிப்பு: 
 
அதிக மழைப்பெறும் பகுதிகள்: 
அதிக மழைப்பெறும் பகுதிகள்
மேற்கு கடற்கரை சமவெளிகள்
மேகாலயாவின் தென்பகுதி
திரிபுரா
அருணாச்சலப் பிரதேசம்
நாகலாந்து

VI. வேறுபடுத்துக – 1. வானிலை மற்றும் காலநிலை

வானிலை காலநிலை
ஓர் இடத்தின் குறுகிய கால வளிமண்டல நிலையைக் குறிப்பது. ஒரு பகுதியின் நீண்டகால வானிலை சராசரியைக் குறிப்பது.
குறுகிய காலத்தில் ஏற்படும் வெப்பம், காற்று, மழை, மேகமூட்டம், வறட்சி, சூரிய ஒளி ஆகியவற்றை குறிக்கிறது. 30 முதல் 35 ஆண்டுகள் வரை ஏற்படும் வானிலை மாற்றத்தைக் குறிக்கிறது.

VI. வேறுபடுத்துக – 2. அயன மண்டல பசுமைமாறாக் காடுகள் மற்றும் இலையுதிர்க் காடுகள்

அயன மண்டல பசுமைமாறாக் காடுகள் அயன மண்டல இலையுதிர்க் காடுகள்
மழைபொழிவு – 200 செ.மீ. க்கும் மேல். மழைபொழிவு – 100 முதல் 200 செ.மீ.
வெப்பநிலை – 22°C க்கும் மேல். வெப்பநிலை – 27°C க்கும் மேல்.
ஈரப்பதம் – 60 முதல் 70%. ஈரப்பதம் – 70%.

VI. வேறுபடுத்துக – 3. வடகிழக்கு பருவக் காற்று மற்றும் தென்மேற்கு பருவக் காற்று

வடகிழக்கு பருவக் காற்று தென்மேற்கு பருவக் காற்று
செப்டம்பர் இறுதியில் தொடங்குகிறது. ஜூன் முதல் வாரம் தொடங்குகிறது.
இந்தியாவின் மொத்த மழையளவில் 25% கிடைக்கிறது. இந்தியாவின் மொத்த மழையளவில் 75% கிடைக்கிறது.
தமிழ்நாட்டிற்கு அதிகமான மழை தருகிறது. தமிழ்நாட்டிற்கு குறைவான மழை தருகிறது.

VII. காரணம் கண்டறிக 
1. இந்தியா அயன மண்டலப் பருவக் காற்று காலநிலையைப் பெற்றுள்ளது.
விடைகுறிப்பு: 
இந்தியா பருவக் காற்றுகளின் தாக்கத்திற்கு உள்ளாகிறது.
 
2. மலைப்பகுதிகள் சமவெளிகளைவிட குளிரானவை.
விடைகுறிப்பு: 
புவிப்பரப்பில் இருந்து உயரே செல்லச் செல்ல வெப்பநிலை குறைகிறது.
 
VIII. விரிவான விடையளிக்கவும்
1. தென்மேற்கு பருவக் காற்று குறித்து எழுதுக.

தென்மேற்கு பருவக் காற்று:
தென்மேற்கு பருவக்காற்று ஜூன் முதல் வாரத்தில் தென்இந்தியாவில் தொடங்குகிறது.
இப்பருவக்காற்று ஜூலை 15-இல் அனைத்து இந்தியப் பகுதிகளுக்கும் முன்னேறுகிறது.
உலகளாவிய காலநிலை நிகழ்வான "எல்நினோ" பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இடி, மின்னலுடன்கூடிய தென்மேற்கு பருவக்காற்றின் துவக்கமே பருவமழை வெடிப்பு.
இந்தியாவின் தென்முனையை அடையும்பொழுது இரண்டு கிளைகளாகப் பிரிக்கிறது.
இந்தியாவின் ஒட்டு மொத்த மழையளவில் 75 சதவீதம் மழைப்பொழிவைத் தருகிறது.
தென்மேற்கு பருவக்காற்று இந்தியாவின் வெப்பநிலையை பெருமளவில் குறைக்கிறது.
தமிழ்நாடு மலைமறைவுப் பகுதியில் அமைந்துள்ளதால் குறைவான மழை பெறுகிறது.

2. இந்தியக் காடுகள் பற்றி விவரிக்கவும்.

இந்தியக் காடுகள்:

அயன மண்டல பசுமைமாறாக் காடுகள்:
ரப்பர், ரோஸ் மரம், தென்னை, மூங்கில், எபனி.
அயன மண்டல இலையுதிர்க் காடுகள்:
தேக்கு, சால், சந்தனம், ஆம்லா, குசம், படாக்.
அயன மண்டல வறண்டக் காடுகள்:
கருவேலம், சீமைக் கருவேலம், ஈச்சமரம், இலுப்பை, ஆலமரம், பலா, ஆவாரம்பூ.
மலைக் காடுகள்:
சால், லாரஸ், அமுரா, டாக், ஜாமுன், ஓக், சில்வர் பெர், பைன்
அல்பைன் காடுகள் அல்லது ஊசியிலைக் காடுகள்:
ஒக், சில்வர் பெர், பைன், ஜுனிப்பர்.
ஓத அலைக் காடுகள் அல்லது சதுப்புநிலக் காடுகள்
இது மாங்குரோவ் காடுகள்.
கடற்கரையோரக் காடுகள் அல்லது கடற்கரை காடுகள்:
தென்னை, பனை, சவுக்கு.
ஆற்றங்கரைக் காடுகள் அல்லது நதி வனப்பகுதி:
புதர் தாவரங்கள், புளியமரம்.