இலக்கணம் வேர்ச்சொல் அறிதல் | Tnpsc Illakkanam Versol aarithal - Kalvi Mini

kalviMini,Kalvimini.com,kalvi mini

இலக்கணம் வேர்ச்சொல் அறிதல் | Tnpsc Illakkanam Versol aarithal

 

இலக்கணம் - வேர்ச்சொல் அறிதல்:



வேர்ச்சொல் என்றால் என்ன?


ஒரு சொல்லின் மூலச்சொல்லே அச்சொல்லின் வேர்ச்சொல் எனப்படும்.


வேர்ச்சொல்லை பிரிக்க முடியாது.


கொடுக்கப்பட்டிருக்கும் நான்கு விடைகளில் எந்த சொல் கட்டளை பிறப்பிக்கும்படி அமைந்திருக்கிறதோ அதுவே வேர்ச்சொல் ஆகும்.


(எ.கா):

நினைத்தேன்

விடை : நினை


சில சொற்களும் அதனோடு வேர்ச்சொற்களும் பின்வருமாறு:


சொற்கள் வேர்ச்சொற்கள்

  • பற்றினால் -பற்று

  • ஒடாதே -ஒடு

  • அகன்று -அகல்

  • பார்த்தான் -பார்

  • அறுவடை -அறு

  • கெடுத்தாள் -கெடு

  • இயக்கிடு -இயக்கு

  • பாடிய -பாடு

  • கேட்க -கேள்

  • உற்ற -உறு

  • உருக்கும் -உருக்கு

  • எஞ்சிய -எஞ்சு

  • ஒட்டுவிப்பு -ஒட்டு

  • கண்டனன் -காண்

  • நினைத்தேன் -நினை

  • கொடுதீர் -கொடு

  • ஓடாது -ஓடு

  • கற்றேன் -கல்

  • காத்தவன் -கா

  • காட்சியில் -காண்

  • கொடாமை -கொள்

  • தட்பம் -தண்மை

  • மலைந்து -மலை


வேர்ச்சொல்லை தேர்வு செய்தல்:


1. அளித்தல் என்ற சொல்லின் வேர்ச்சொல்                         - அளி

2. ஆடினான் என்ற சொல்லின் வேர்ச்சொல்                          - ஆடு

3. அணிந்தான் என்ற சொல்லின் வேர்ச்சொல்                    - அணி

4. அறுந்தது என்ற சொல்லின் வேர்ச்சொல்                           - அறு

5. இழப்பர் என்ற சொல்லின் வேர்ச்சொல்                                - இழ

6. ஈட்டினான் என்ற சொல்லின் வேர்ச்சொல்                       - ஈட்டி

7. உண்பார் என்ற சொல்லின் வேர்ச்சொல்                             - உண்

8. ஊர்ந்தது என்ற சொல்லின் வேர்ச்சொல்                             - ஊர்

9. எய்தான் என்ற சொல்லின் வேர்ச்சொல்                              - எய்

10. ஒழிந்தான் என்ற சொல்லின் வேர்ச்சொல்                     - ஒழி

11. ஓதியவர் என்ற சொல்லின் வேர்ச்சொல்                         - ஓதி

12. கண்டோம் என்ற சொல்லின் வேர்ச்சொல்                     - காண்

13. கொய்தான் என்ற சொல்லின் வேர்ச்சொல்                    - கொய்

14. செய்யார் என்ற சொல்லின் வேர்ச்சொல்                          - செய்

15. சொல்வான் என்ற சொல்லின் வேர்ச்சொல்                   - சொல்

16. தட்டுவான் என்ற சொல்லின் வேர்ச்சொல்                     - தட்டு

17. தெளிந்தனர் என்ற சொல்லின் வேர்ச்சொல்                  - தெளி

18. தொடர்ந்தான் என்ற சொல்லின் வேர்ச்சொல்              - தொடர்

19. நின்றார் என்ற சொல்லின் வேர்ச்சொல்                            - நில்

20. பிரித்தார் என்ற சொல்லின் வேர்ச்சொல்                          - பிரி

21. புகழ்ந்தான் என்ற சொல்லின் வேர்ச்சொல்                    - புகழ்

22. பெற்றாள் என்ற சொல்லின் வேர்ச்சொல்                        - பெறு

23. வென்றார் என்ற சொல்லின் வேர்ச்சொல்                       - வெல்

24. வனைந்தான் என்ற சொல்லின் வேர்ச்சொல்                 - வனை

25. உறங்கினான் என்ற சொல்லின் வேர்ச்சொல்              - உறங்கு

26. தின்றான் என்ற சொல்லின் வேர்ச்சொல்                         - தின்

27. பாடினார் என்ற சொல்லின் வேர்ச்சொல்                          - பாடு

28. நடித்தான் என்ற சொல்லின் வேர்ச்சொல்                        - நடி

29. பற்றினான் என்ற சொல்லின் வேர்ச்சொல்                     - பற்று

30. வாழ்க என்ற சொல்லின் வேர்ச்சொல்                                - வாழ்